Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு ஹஜ்ரத் மொஹானி

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு  மறைக்கப்பட்ட வரலாறு

 ஹஜ்ரத் மொஹானி    




 நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது சரித்திரத்தில்  மறைக்கப்பட்டது 

 ஆம்! 1921 –ல் அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றோர் இந்தியாவிற்கு டொமினிக் அந்தஸ்தை – அதாவது பாதுகாக்கப்பட்ட சுதந்திரத்தை வழங்க வேண்டும்” என ஒரு தீர்மானத்தை பிரதானமாக முன் மொழிந்தனர்.

டொமினிக் அந்தஸ்து இந்தியாவிற்கு வழங்கப்பட்டால் ஆட்சியில் ஆங்கிலேயருடன் இந்தியரும் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று
மிகப்பெரும் தேசியத்தலைவராகவும், கிலாஃபத் இயக்கத்தலைவர்களில் ஒருவராகவும் அங்கம் வகித்த மௌலானா, மற்றும் ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும் இத்தீர்மானத்தை எதிர்த்து குரல் கொடுத்தார்.

ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெற வேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான டொமினிக் அந்தஸ்தல்ல

ஆங்கிலேயர்கள் இந்த தேசத்திலிருந்து முழுமையாக வெளியேறி இம் மண்ணின் மைந்தர்களிடம் இந்த தேசத்தை ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் வேண்டும் என்றார் Complete Independence Nation 

பூரண சுதந்திரம் என்கிற தீர்மானத்தை முதன் முதலாக மொழிந்து ஹஜ்ரத் மொஹானி அவர்கள் ஆற்றிய தீர்க்கமான உரையைக் கேட்ட மாநாட்டு பங்கேற்பாளர்கள், 


ஹஜ்ரத் மொஹானி அவர்களின் முழக்கம் தீர்மானமாக நிறைவேற்றப்படாதா?  என பெரும் ஆர்வத்துடன் இருந்தனர்.

ஆனால், மகாத்மா காந்தி எழுந்து நின்று இத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தார். 

அதனால் ஹஜ்ரத் மொஹானி அவர்களின் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிற்று.

ஆதார நூல்: Young India, May 4, 1992; Ref; Shan Muhammad, Freedom Movement in India – The Role Of Ali Brothers, Page Number: 159 – 160, 164 – 165.)

ஆனால், 1929 லாஹூர் காங்கிரஸ் மாநாட்டில் “முன்பு எதை எதிர்த்தாரோ” அதே தீர்மானத்தை – பூரண சுதந்திர கோரிக்கையை மகாத்மா காந்தியே முன் மொழிந்தார் என வரலாறு கூறுகின்றது.

மிகச் சிறந்த எழுத்தாளராள ஹஜ்ரத் மொஹானி அவர்கள் தன் எழுத்தாற்றலைத் தேச விடுதலைக்கு அர்ப்பணிக்கும் முகமாக உருது முஹல்லா என்ற பத்திக்கையை ஆரம்பித்தார் 

அப்பத்திக்கை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதராக மக்களைச் சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது.

ஒருமுறை உருது முஹல்லாவில் பிட்டீஷாருக்கு எதிரான அக்னி வார்த்தைகளைத் தாங்கிய ஓர் இளைஞனின் கவிதை பிரசுரமானது. 

அக்கவிதை ஏற்படுத்திய சலசலப்பினால் கொதித்துப்போன ஆங்கில அரசு ஹஜ்ரத் மொஹானிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அக்கவிதையை எழுதியவர் யார் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸ் அச்சுறுத்தியது. அதற்கு ஹஜ்ரத் மொஹானி மறுத்து விட்டார். கவிதையைப் பிரசுரித்த பத்திரிக்கையின் ஆசியர் நான் எனவே அதற்கு நான் தான் பொறுப்பு. 

எழுதியவரை அடையாளம் காட்டமுடியாது. வேண்டுமானால் என்மீது நடவடிக்கை எடுங்கள் என்று நோட்டீஸுக்குத் துணிச்சலுடன் பதிலளித்தார்.

ஆங்கில அரசு ஹஜரத் மொஹானி மீது நடவடிக்கை எடுத்தது. கோர்ட்டுக்கு அவரை அலைக்களித்தது. இறுதியில் ஆறுமாதச்சிறைத் தண்டனை வழங்கியது. 

உருது முஹல்லா பத்திக்கையைத் தடை செய்தது. அப்பத்திரிக்கை அச்சிடப்பட்ட ஹஜ்ரத்துக்கு சொந்தமான அச்சுக்கூடத்தை ஜப்தி செய்தது.

யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் இத்தனைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமா?  என்று  கேட்டபோது அது யாரோ எழுதிய கவிதைதான். ஆனால் எனக்கு உடன்பாடான கவிதை. 

என் தேசநலன் நாடும் வார்த்தை களைச் சுமந்த கவிதை. அக்கவிதையை என் பத்திக்கையில் பிரசுத்ததற்காக நான் பெருமைப் படுகிறேன். 

அதற்காக எனக்கு இத்தண்டனை என்றால் என் தேசத்தின் விடியலுக்காக இத்தண்டனையை மகிழ்வோடு ஏற்கிறேன் என்று பதிலளித்தார் ஹஜ்ரத் மொஹானி அவர்கள் கைது செய்யப்படும்போது அவரது மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. 


குழந்தையை ஈன்ற அத்தாய் தன் கணவன் குழந்தையின் முகத்தைப் பார்க்கவும்  குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைகிறார். 

எந்தச் சிறையில் அவர் அடைக்கப் பட்டிருக்கிறார் என்பதைக் கூற ஆங்கில அரசு மறுத்து விடுகிறது. மூன்று நாட்கள் பட்டினியுடன் பல சிறைகளுக்கும் அலைந்த அத்தாய் இறுதியில் தன் கணவனைச் சந்திக்கிறார்.

தனது வாரிசை முதன் முதலாகப் பார்த்த ஹஜ்ரத் மொஹானி அவர்கள் சிறைக் கம்பிகளினூடே கைகொடுத்து குழந்தையை வாங்கி முத்தமிடுகிறார்.

தன் குழந்தைக்கு ஒரு தகப்பன் முத்தமிட்டது குற்றமா? ஆங்கில அரசு அதனையும் குற்றமாக்கியது.

சிறை விதிகளை மீறி நடந்தார் என்று குற்றம் சாட்டி மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இந்திய மண்ணில்  கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது*

நன்றி மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.

தியாகங்கள் தொடரும்


Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback