Breaking News

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு சிராஜ் உத் தௌலா

அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மறைக்கப்பட்ட வரலாறு

சிராஜ் உத் தௌலா



வங்கத்தை ஆண்டவர் 

நம்மில் பலருக்கும் இந்த பெயர் தெரியாது சரித்திரத்தில்  மறைக்கப்பட்டது

வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது என்று ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில்  நிமிர்ந்து நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா


1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல் இந்திய சுதந்திரப்போர்…! இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான்  சிராஜ்-உத்-தௌலா


பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படையினை கல்கத்தா துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி போர் செய்தார்  அன்றைய தினம் இயற்கை மட்டும் ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும்

தொடர்ந்து  நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் தௌலா*படையின் வெடிமருந்துகள் நனைந்தன. நான்கு மணி நேரம் கடும் மழையிலும் காற்றிலும் வெடிமருந்துகள் அனைத்தும் செயல் இழந்த போதிலும் இறுதிவரை அஞ்சாது போரிட்டார்.  

அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தங்களுக்கு எதிராக மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சிராஜுத்தெளலாவின் செல்வாக்கை முறியடிக்க ஆங்கிலேயர் ஒரு சதித் திட்டம் தீட்டினர். 

ஓர் இருட்டறையில் 144 ஆங்கிலேயர்களை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ‘ஹோல்வேல்’ என்ற ஆங்கிலேயன் அவதூறு பரப்பினான்.  உடனே சென்னையிலிருந்து ‘அட்மிரல் லாட்ஸன்’ மற்றும் ‘சிலாலோ’ இருவரும் கல்கத்தாவிற்க்கு வந்தார்கள்.இவர்கள் வெளிப்படையாக சிராஜுத்தெளலாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மறைமுகமாக அவரை வீழ்த்த எட்டப்ப  வேலைகளை செய்யத்துவங்கினர்.

சிராஜுத்தெளலாவின் ஆலோசகர் மீர் ஜஃபரை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கினர். கி.பி 1757ல் பிளாசி மைதானத்தில் நடந்த யுத்தத்தில் மீர் ஜஃபரின் சதியால் அஞ்சா நெஞ்சகர் சிராஜுத்தெளலா தோல்வியுற நேர்ந்தது. அவர் தப்பித்து படகு மூலம் முதலில் மூர்ஷிதாபாத் சென்று பின்னர் பாட்னா சென்றார் .ஆனால் இறுதியில் மிர் ஜாபரின் வீரர்களால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் மீர் ஜஃபரின் மகன் மீறான் சிராஜுத்தெளலாவை தூக்கிட்டு கொன்றான். வடக்கில்  தங்களுக்குப் பெரும் தலை வேதனை தந்த மாவீரன் சிராஜுத் தௌலாவை ஆங்கிலேயர்கள் சதியால் கொன்றனர்.


வரலாறு மறந்த சமூகம் வரலாறு படைத்ததாய் சரித்திரம் இல்லை. ஆற்றல் மிகுந்த இளைய சமுதாயமே... நமது சொந்த மண்ணின் விடுதலைக்காக, மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களின் தியாகங்கள்  பல.  நமது சொந்த
விடுதலைக்காக மண்ணின் மைந்தர்களான நமது முன்னோர்களின் வரலாறுகளை நினைவு கூர்வோம்.

*தியாகங்கள் தொடரும்*



Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback