இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மௌலவி அஹமதுஷா
அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு மறைக்கப்பட்ட வரலாறும் நம்மில் பலர் மறந்து விட்ட வரலாறும்
மௌலவி அஹமதுஷா
சென்னையில் பிறந்து வளர்ந்து உத்திரப் பிரதேசத்தில் வாழந்தவர்.
புரட்சி விதையை நாடெங்கும் விதைப்பதற்க்கு வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர் லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பகிரங்கமாக சுதந்திரப் பிரச்சாரம் செய்தார்.
ஆங்கிலேயர்-களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டையோ மதங்களையோ பாதுகாக்க முடியாது” – என்றார். ஆங்கில அரசு விதித்திருந்த பல தடைகளை மீறி இவ்விதம் பிரச்சாரம் செய்ததற்காக அவர்மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி, ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.
1857 – இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் போது சிறைச்சாலையை உடைத்து சிப்பாய் போராளிகள் இவரை விடுவித்தனர். சிறந்த ராணுவ யுத்த நிபுணரான அஹமதுல்லா ஷாஹ் தனக்கென ஒரு சிறுபடையைத் திரட்டி, லக்னொவின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஒரு குட்டி அரசையே நடத்தினார்.
தன் தனித்துவங்களின் காரணமாக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றிருந்தார். ஆங்கிலேய அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே ஒரு மகத்தான இயக்கத்தை உருவாக்கிய மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், இணையற்ற திறமையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும்.
ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டீஷ் ராணுவத் துருப்புகளுக்கு கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வருவதை அஹமதுல்லா ஷாஹ் அறிகின்றார்.
அந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக 1858 ஜனவரி 15 – இல் கான்பூர் நோக்கிப் படை நடத்தினார். மேஜர் அவுட்ராம் படைக்கும் மௌலவி படைக்கும் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது.
அந்த யுத்தத்தில் கையில் தோட்டா பாய்ந்து படு காயமடைந்தார். அவரை ஆங்கிலேயரிடம் சிக்கவிடாமல் நண்பர்கள் ஒரு டோலியில் வைத்து லக்னோ கொண்டு வந்துவிட்டனர்.தனக்கு ஏற்பட்ட காயம் பூரணமாக குணமடையுமுன் பிப்ரவரி 15 – இல் மீண்டும் போர் முனைக்கு வந்துவிட்டார்.
கான்பூரில் இருந்து அவுட்ராமின் படை தங்கியிருந்த பகுதிக்கு ஆங்கிலத் தளபதி காலின் வருவதாகத் தகவல் கிடைத்தது. காலின் வந்து சேருமுன் அவுட்ராமை ஒழித்துவிட வேண்டுமென்ற திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். ஆனால் மௌலவி முஹம்துஷாயின் முயற்சி தோல்வியடைந்தது. என்றாலும் மௌல்வியின் இத்தாக்குதல்கள் ஆங்கிலேயருக்குப் பெரும் அச்சத்தையும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தின.
கான்பூரில் இருந்து அவுட்ராமின் படை தங்கியிருந்த பகுதிக்கு ஆங்கிலத் தளபதி காலின் வருவதாகத் தகவல் கிடைத்தது. காலின் வந்து சேருமுன் அவுட்ராமை ஒழித்துவிட வேண்டுமென்ற திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். ஆனால் மௌலவி முஹம்துஷாயின் முயற்சி தோல்வியடைந்தது. என்றாலும் மௌல்வியின் இத்தாக்குதல்கள் ஆங்கிலேயருக்குப் பெரும் அச்சத்தையும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தின.
அதன் பின்னர் லக்னோவின் இருதயம் போன்ற ஷாஹத்கன்ஞைக் கைப்பற்றி, கோட்டை
கட்டிடத்தில் இருந்து ஆங்கிலேயரது பீரங்கிப் படையைத் தாக்கினார் இவரை அப்பகுதியில் இருந்து விரட்ட ஆங்கில அரசு 21 படைப்பிரிவுகளை அனுப்பி வைத்தது. இதனால் லக்னோவில் இருந்து 29 மைல் தூரத்திலுள்ள பாரியில் முகாமிட்டார்.
அயோத்தி பகுதியில் சிற்றரசு நடத்திய பான்ராஜா ஜகன்னாத சிங் தனக்கு உதவுவார் என்ற எண்ணத்துடன் அவருக்கு கடிதம் அனுப்புகிறார்.
ஜகன்னாத சிங்கிடம் இருந்து அஹமதுல்லா ஷாவிற்கு அழைப்பு வருகிறது.
அவர் அழைப்பின் பிண்ணனியில் பின்னப்பட்டிருந்த சூழ்ச்சியை அறியாத
அஹமதுல்லா ஷாஹ் ஆரவாரம் ஏதுமின்றி யானை மீதமர்ந்து பாவன்ராஜாவின் கடி
நகருக்குள் நுழைகிறார். அவர் கோட்டைக்குள் நுழைந்ததும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன.
கோடடைச்சுவரின் மீது காவலர்கள் சூழ ராஜா ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தார்.
சதிவலைக்குள் அகப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த மௌலவி, தப்பிக்க
முயற்சிக்கும் முன் ராஜாவின் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட
தோட்டாக்களை மார்பில் ஏந்தி மண்ணில் சாய்கிறார் அஹமதுல்லா ஷாஹ்.
ஆங்கிலேயருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் வெகுமதிகளைப்
பெறுவதற்காகவும் ராஜாவும் அவர் தம்பியும் வீரமரணமடைந்த மௌலவியின் தலையை
வெட்டி எடுத்துக் கொண்டு, 13 மைல் தூரத்திலுள்ள தாணாவில் முகாமிட்டிருந்த
ஆங்கிலேயரிடம் ஓடினர்.
மௌலவியின் தலையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதனை ஒருகம்பில் செருகி
போலிஸ் கொத்தவால் சாவடியில் எல்லோரும் பார்க்கும் படி ஊன்றி வைத்தார்கள்.அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி தீயிலிட்டுப் பொசுக்கினர்.
இந்த மண்ணிற்காக உயிர் நீத்த அப்பெருமகனின் உடல்கூட முறைப்படி நல்லடக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறமுடியாமல் போயிற்று.
அவரது தலை மட்டும் அஹ்மத்பூர் ஹான் மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரை இழந்த இந்த வீரனின் பெயர் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு